ADVERTISEMENT

ஜாதக யோகங்கள் எவை? கோகங்கள் குறித்த ஒரு பார்வை!

ஜாதக யோகங்கள் எவை?  கோகங்கள் குறித்த ஒரு பார்வை! ஜாதக யோகங்கள் எவை? கோகங்கள் குறித்த ஒரு பார்வை!

யோகம் என்றாலே நல்லூழ் என்பது விளங்குகிறது. பிறப்பினால் ஏற்படும் நல்லூழ் எவை என்பது குறித்து, பிறந்த சாதகத்தை கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம்.

பிறந்த சாதகத்தில் கட்டங்களில் உள்ள கோள்களின் நிலையை மட்டும் வைத்து யோக நிலையையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் கணீத்திட இயலாது. இந்த யோகங்களின் பலன்களை அறியும் முன்பு, கோள்களின் தசைகள், அவற்றின் ஊழிகள், ஆகியவற்றை பொருத்து யோகங்களின் பலன் உண்டாகும்.

மேலும் இந்த கோள்கள் தீய இடங்களில் இருந்துவிடக்கூடாது. தீய கோள்களுடனான சேர்க்கையோ அல்லது பார்வையோ உண்டானால், யோகம் தீங்கான பலனை கொடுக்கும்.

பிறந்த சாதகத்தில் ஒரு கோளுக்கும் மற்றொரு கோளுக்கும் உள்ள தொடர்புதான் யோகம் என்கிற நல்லூழ் என்பார்கள். இம்மாதிரி நல்லூழ்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றில் தலைசிறந்தவற்றை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

முதலில், ஜாதகத்தில் நிலவின் இருப்பிடத்தை வைத்து என்னென்ன யோகங்கள் உள்ளன என காணலாம்!

1.  துருதுரா யோகம்:  நிலவிற்கு முன்னும் பின்னும் ராசிகளில் ஞாயிறு, ராகு, கேது என இந்த மூன்று கோள்களை தவிர பிற கோள்கள் இருப்பின், இந்த துருதுரா யோகம் ஏற்படும். இந்த துருதுரா யோகம் கொண்டவர்கள், சொத்து, உடல் நலம், வண்டி வாங்குவது, நல்ல குணங்கள் பெற்றிருப்பது, உயர்ந்த மனிதர்களுடன் பழக்கம் என சிறந்தவற்றை பெறுவர்.

2.  அனபா யோகம்: நிலவிற்கு பன்னிரெண்டாவது ராசி கட்டத்தில் ராகு மற்றும் கேது வை தவிர பிற கோள்கள் இருப்பது இந்த அனபா யோகம் ஏற்படுத்தும். இந்த அனபா யோகம், நல்ல உடல் நலத்தையும், பேரும் புகழும் உண்டாகும் வாய்ப்பையும், புகழ்ச்சியின் சிகரத்திற்கு எடுத்துச்செல்லும் நல்லூழும் தரும்.

3. சுனபா யோகம்: நிலவிற்கு இரண்டில் ஞாயிறு, ராகு, கேது தவிர மற்ற கோள்கள் இருப்பதால்  சுனபா யோகம் ஏற்படும் .  சுனபா யோகம் கொண்டவர்களுக்கு உழைத்து வாழ்வில் உயர, நல்ல அறிவார்ந்த ஆற்றல்,  அரசருக்கு ஈடான பேரும் புகழும் கிடைக்கும்.

4.  கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம்: நிலவிற்கு 1, 4, 7, 10  ல்  வியாழன் இருந்தால் கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் ஏற்படும். இதனால் நல்ல பெயரும் புகழும் உண்டாகும். நீண்ட ஆயுள், போதிய வருவாய், எதிரிகளை வெல்லும் திறன் ஆகியவை கிட்டும்.

5.  சந்திர மங்கள யோகம்: நிலவு, செவ்வாய் ஆகியவற்றின் சேர்க்கை சந்திர மங்கள யோகத்தை ஏற்படுத்தும். சந்திர மங்கள யோகம் கொண்ட ஜாதகக்காரர்கள், நிலம், சொத்து, பேரும் புகழும் பெற்று வருவாய் ஈட்டுவதில் வல்லவர்களாக திகழ்வார்கள். இருப்பினும் மனம் பதைபதைப்புடன் இருக்கும்.

6. அதி யோகம்: நிலவிற்கு 6, 7, 8 வீடுகளில் நல்ல கோள்களான வியாழன், அறிவன், வெள்ளி இவை கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ இருந்தால் இந்த யோகம் ஏற்படும். அதியோகம் கிடைப்பதற்கு அரிய யோகமாகும். இந்த யோகம் உடையவர்கள், பெரும்பாலும் உயர் பதவிகளில் இருப்பார்கள். காவல்துறையில் பொறுப்பான உயர் பதவியை கொண்டிருப்பார்கள். நல்ல வருவாய் கொண்டவர்களாக வாழ்வார்கள். பேரும் புகழும் வற்றாமல் கிடைத்துவரும்.  

7. அதி  லக்ன யோகம்: லக்னத்திற்கு 6, 7, 8  ல் வியாழன், அறிவன், வெள்ளி இருந்தால் அது அதி  லக்ன யோகம் எனப்படும். இதுவும் ஒரு அரிய யோகமே. இந்த யோகம் உடையவர்கள், பெரும்பாலும் உயர் பதவிகளில் இருப்பார்கள். காவல்துறையில் பொறுப்பான உயர் பதவியை கொண்டிருப்பார்கள். நல்ல வருவாய் கொண்டவர்களாக வாழ்வார்கள். பேரும் புகழும் வற்றாமல் கிடைத்துவரும்.

8.  சகட யோகம்: நிலவிற்கு வியாழன் 8 அல்லது 12 ல் இருந்தால் இந்த சகடயோகம் ஏற்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சுழலும் சக்கரம் போல், நிலையில்லாத வாழ்வைப் பெறுவர்.

இரண்டாவதாக, ஜாதகத்தில் ஞாயிறின் இருப்பிடமும் அதன் தொடர்பில் கோள்கள் இருக்கும் இடங்களையும் கொண்டு, என்னென்ன யோகங்கள் உள்ளன என பார்க்கலாம்.

1.  வேசி யோகம்: ஞாயிறுக்கு இரண்டில் நிலவு, ராகு, கேது ஆகிய கோள்கள் தவிர வேறு எந்த கோள்கள் இருந்தாலும் வேசி யோகம் உண்டாம். வேசி யோகம் கொண்டவர்கள் நல்ல வருவாய் கொண்டவராகவும், பகைவர்களை வெற்றி கொள்ளும் தன்மையுடனும் வாழ்நாளில் விளங்குவார்

2.  வாசி யோகம்: ஞாயிறுக்கு பன்னிரண்டில் நிலவு, ராகு, கேது இவற்றைத் தவிர பிற கோள்கள் இருப்பது இந்த வாசி யோகம் ஏற்படுத்தும். இந்த வாசி யோகம் கொண்டவர்கள், பேரும் புகழும் கொண்டு வாழ்வில் சிறந்து ஓங்குவர்.

3.  சுப உபயசாரி யோகம்: ஞாயிறுக்கு இருபக்கங்களிலும் கோள்கள் இருப்பது இந்த சுப உபயசாரி யோகத்தை ஏற்படுத்தும். இந்த சுப உபயசாரி யோகம் கொண்டவர்கள் நல்ல பண வருவாய் மற்றும் பேரும் புகழும் கொண்டவர்களாக விளங்குவர்

மூன்றாவதாக, அறிவன் (புதன்), செவ்வாய், வியாழன், காரி (சனி) மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் இருப்பிடத்தை கொண்டு, என்னென்ன யோகங்கள் உள்ளன என பார்க்கலாம்

1.  பத்ர யோகம்:  அறிவன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது நிலவின் வீடுகளில் நிற்பதால் இந்த பத்ர யோகம் ஏற்படுகிறது.  பத்ர யோகம் கோன்டவர்,  திடமான தோற்றம்,, சிறந்த பேச்சு திறமை, நல்ல வருவாய், செல்வம் கொண்டவராக வாழ்வர்.

2.  ருசக யோகம்: செவ்வாய் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று, லக்னத்திற்கோ அல்லது நிலவிற்கு கேந்திர திரி கோணங்களில் இருப்பது இந்த ருசக யோகம் ஏற்படுத்தும். இந்த ருசக யோகம் கொண்டவர்கள், நல்ல பேரும் புகழும், நீண்ட ஆயுளையும், நல்ல வருவாய் கொண்டவர்களாகவும், தீயவர்களை வெல்லும் ஆற்றல் படைத்தவர்களாக, பெரிய பதவிகளில் வீற்றிருப்பர்.

3.  சச யோகம்: காரி, ஆட்சி உச்சங்களில் இருந்து, ராசி வீட்டில் நிற்பது நல்ல படிப்பு, சொத்து, வண்டிகள், பெரிய பதவிகள் ஆகியவை கிடைக்கும் சச யோகம் கொடுக்கும்.  இருப்பினும், இந்த சச யோகம் கொண்டவர்கள் தீய குணங்களை கொண்டவர்களாக விளங்குவர்.

4.  அம்ச யோகம்: வியாழன் ஆட்சி உச்சம் பெற்று, லக்னத்திற்கோ, நிலவிற்கோ அவற்றின் வீட்டிலோ நிற்பது நல்ல பெயர் கொண்டவராகவும், சீமானாகவும், பணம் வருவாய் உடையவராகவும் வாழ்வார்.

5.  மாளவ்ய யோகம்: வெள்ளி ஆட்சி உச்சம் பெற்று, லக்னத்திற்கோ, நிலவிற்கோ அவற்றின் வீட்டில் நிற்பது மாளவ்ய யோகம் தரும்.  மாளவ்ய யோகம் உடையவர்கள்,  நல்ல தோற்றம் உள்ள உடல்வாகு உடையவராகவும், பெயரும் புகழும் உள்ளவராகவும், கொடையாளியாகவும்,  வண்டிகள் பல கொண்டவராகவும் விளங்குவார்.  மேலும் மாளவ்ய யோகம் கொண்டவர்கள் காமம் கொண்டவராக இருப்பார்

பிற யோகங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

1. அஷ்டலட்சுமி யோகம்: ராகு 6 ல் நின்று, வியாழன் ராசி கட்டத்தில் இருப்பாரேயானால், இந்த அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். இந்த அஷ்டலட்சுமி யோகம் கொண்டவர்கள், அனைத்துவிதமான நலன்களும் மகிழ்வும் பெற்று வாழ்வார்கள்

2. தர்ம கர்மாதிபதி யோகம்: ராசியின் ஒன்பது மற்றும் பத்துக்கு உரியவர்கள் ஒன்று சேர்வதால் அல்லது பார்த்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படும். தர்மகர்மாதிபதி யோகம் கொண்டவர்கள், நல்ல அறிவாளியாகவும், பெரிய பதவிகளில் வீற்றிருப்பவராகவு, சிறந்த வருவாய் கொண்டவராகவும், புகழ் பெற்று விளங்குவார்

3. வசுமதி யோகம்: 3, 6, 10, 11 ல் நல்ல கோள்கள் இருந்தால் வசுமதி யோகம் உண்டாகும். வசுமதி யோகம் கொண்டவர்கள் நல்ல செல்வச் செழிப்புடன், பேரும் புகழும் கொண்டு, பெரிய பதவிகளில் இருப்பார்கள்

4. குரு சண்டாள யோகம்: வியாழன் கோள், ராகு, கேது அல்லது காரியுடன் (சனி) சேர்ந்திருந்தால், இந்த குரு சண்டாள யோகம் ஏற்படும். குரு சண்டாள யோகம் பெற்றவர்கள், மதப்பற்று இல்லாதவர்களாகவும், கடவுள் பேரில் நம்பிக்கை அற்றவர்களாகவும் வாழ்வர்.

5. கால சர்ப்ப யோகம்: லக்னமும் எல்லாக் கோள்களும் ராகு கேது இவர்களுக்கு நடுவில் இருந்தால் கால சர்ப்ப யோகம் ஏற்படும். கால சர்ப்ப யோகம் கொண்டு பிறந்தவர்கள், பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தன்னுடைய உழைப்பினாலும் முயற்சியாலும் தன் வாழ்வில் முன்னேறிக் கொள்வார்கள்

6. விபரீத ராஜயோகம்: ஒருவரின் ராசிக்கட்டத்தில் தீய இடங்கள் என கருதப்படும் 6, 8, 12 ஆகியவற்றிற்கான உரியவர்கள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6, 8, 12 வீடுகளில் இருந்தால் விபரீத ராஜ யோகம் உள்ளவர் என கருதப்படுவார். இத்தகைய விபரீத ராஜயோகத்தை கொண்டு பிறந்தவர்கள், பிறப்பால் ஏழையாய் இருந்தாலும், திடீரென வருவாய் பெருகி, செல்வச்செழிப்பு பெற்று ராஜயோகத்தை அடைவார்கள்

7. நீச்ச பங்க ராஜயோகம்: கோள்கள் தம் வலுவிழந்த நிலையில் ஜாதகரின் ராசியில் இருந்தால் அந்த கோள்கள் நீச்ச நிலையில் இருப்பதாக கருதப்படும். வலுக் குன்றிய நிலையில் இருந்தாலும், இந்தக் கோள்கள் நின்ற ராசி ஆட்சியோ உச்சம் பெற்றாலும் அல்லது லக்னத்திற்கோ நிலவிற்கோ அதன் இடங்களில் இருந்தாலும், வலுவிழந்தது இருக்கும் தன்மைக்கு எதிர்மறைப் பலனாக ராஜயோகம் ஏற்படுத்துகிறது. இத்தகைய நீச்ச பங்க ராஜயோகம் கொண்டவர்கள், திடீரென பெரும் புகழும், செல்வமும் கொண்டவராக மாறிவிடுவர்


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading