ADVERTISEMENT

கும்பம் லக்னம் வருவாய், தொழில், செல்வம் அமைப்பும்

கும்பம் லக்னம் வருவாய், தொழில், செல்வம் அமைப்பும் கும்பம் லக்னம் வருவாய், தொழில், செல்வம் அமைப்பும்

கும்ப லக்னகாரர்களுக்கு, அவர்களின் தொழில் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கான வழிவகைகளை செய்பவராக செவ்வாய் விளங்குகிறார்.

செவ்வாய் ஆட்சியில் உயர்வு பெற்று, வியாழன் போன்ற நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வை பெற்றால், மக்களிடையே மதிப்புமிக்க உயர்வான நிலையை அடையக்கூடிய வாய்ப்பு ஜாதகருக்கு கிடைக்கும்.

ஆரூடத்தில் உள்ள 9 கோள்களில் செவ்வாய் ஆளுமை மற்றும் மேலாண்மைக்கான அடிப்படையாக விளங்குவதால் ஜாதகர் பொதுவில் சிறந்த மேலாண்மை திறமை கொண்டவராக விளங்குவார்.  மேலும், கும்ப லக்கினக்காரர்கள் பொதுவாக மக்களே ஆட்சி செலுத்தக்கூடிய துறைகளான காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய் வலுவாக அமைந்து, ஞாயிறின் சேர்க்கை பெற்று, நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வையும் அமையப்பெற்றால், ஜாதகர் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகள் வகிப்பார்.

செவ்வாய், ஞாயிறு - வியாழன் - நிலவு போன்ற அதன் நட்பு கோள்களின் சேர்க்கை பெற்று, வலுவாக அமைந்தால், பிறரால் மதிப்பு - மரியாதை செய்யக் கூடிய அளவிலான பதவிகளை வகிக்கும் வாய்ப்பு ஜாதகருக்கு கிடைக்கும்.

செவ்வாயுடன் ஞாயிறு சேர்க்கை பெற்று அவற்றுடன் நிலவு- ராகு சேர்ந்து அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் வெற்றியாளராக ஜாதகர் வலம் வருவார்.  பொதுவாக இவர் அறுவை மருத்துவத்தில் சிறந்த பெயரை பெற்றிருப்பார்.

செவ்வாய், நிலவு - ராகு அல்லது கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்க்கை பெற்றால், மருந்து, வேதி பொருட்கள், உரம் போன்றவற்றின் தொடர்புடைய துறைகளில், வேலையோ அல்லது தானாக தொழில் செய்தோ பெரும் செல்வம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய் வலுவாக அமைந்தவர்கள் பிறப்பிலிருந்தே பிறரை ஆட்சி செய்யும் குணம் இருக்கும்.  ஆதலால், செவ்வாய், நிலவு, வியாழன் ஆகியவை சேர்க்கை பெற்றிருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் அமையப் பெற்றாலும், ஜாதகர் பிறரை ஆட்சி செய்யக்கூடிய உயர்பதவிகளில் அமைவது உறுதி.

செவ்வாய், ஞாயிறு, அறிவன் (புதன்) சேர்க்கை பெற்று இருந்தால், ஜாதகர் அறிவார்ந்த பொறியாளராக அல்லது கணினி துறைகளில் சாதனை புரிபவராக விளங்குவார்.

செவ்வாய் வெள்ளியுடன் சேர்க்கை பெற்று திரிகோணங்களில் வலுவாக அமையப் பெற்றால் கலை அல்லது தாமாக துவங்கிய தொழில் மூலம் பெரும் செல்வம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய் மற்றும் வெள்ளியுடன், நிலவும் சேர்க்கை பெற்றால், வெளிநாடுகள் தொடர்பு மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.  இந்த அமைப்பு கொண்டவர்களுக்கு, 10ல் வியாழன் அமைந்து, அதனுடன் அறிவன் சேர்க்கை ஏற்படுமேயானால், பிறருக்கு அறிவுரை சொல்லத்தக்க ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய், ராகு - கேது போன்ற தீய கோள்களின் சேர்க்கை பெற்று, நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வையின்றி இருந்தால் அல்லது செவ்வாய் வலுவிழந்து இருந்தால் அல்லது காரியின் (சனி) பார்வை 10ஆம் வீட்டில் இருந்தால் வாழ்வில் ஒரு நிலையற்ற வருவாய் மற்றும் வேலைகளில் ஈடுபடும் நிலை ஏற்படும்.

10ல் ராகு அமைந்து அதனுடன் காரி சேர்ந்து, நற்பயன் பயக்கும் கோள்களின் பார்வையின்றி இருந்தால், சட்டத்திற்கு எதிரான தொழில்களில் ஜாதகர் ஈடுபடுவார்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading