ADVERTISEMENT

12 ராசி வீடுகளில் கோள்கள் நின்ற பார்வையின் வலு

12 ராசி வீடுகளில் கோள்கள் நின்ற பார்வையின் வலு 12 ராசி வீடுகளில் கோள்கள் நின்ற பார்வையின் வலு

ஒவ்வொரு கோளுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வை உண்டு என்பதைப் குறித்து, முன்னது கட்டுரையில் எடுத்துரைத்து இருந்தோம். கட்டுரைகளில் விளக்கப்பட்டுருப்பதை காட்டிலும், முழு பார்வை வலுப்பெற்ற ஒரு குறிப்பிட்ட கோள், லக்னத்தில் அல்லது ஏழாம் வீட்டிலோ இடம்பெற்றிருந்தால் அதனுடைய முழு பார்வையும் குறிப்பிட்ட ராசி வீட்டில் விழும்.  ஒன்று மற்றும் ஏழு அல்லாத பிற ராசி வீடுகளில் இடம் பெற்று நின்றால், அந்த இருப்பு அமைப்பிற்கு ஏற்ப அந்தக் கோளுனுடைய பார்வை குறைந்து அல்லது கூடுதலாகவோ அல்லது நற்பலன் இல்லாமலும் போகலாம். 

இந்த அடிப்படை குறிப்பு, ஒரு ஜாதகரின் பிறந்த நேரத்தில் பிறந்த லக்னத்தைப் பொறுத்து அமைகிறது.  ஆருட கணிப்புகளை பொருத்தவரை, ஒரு ஜாதகர் பிறக்கும் நேரத்தில் லக்கினம் தோன்றுவதாக பொருள். அதே நேரத்தில் அந்த லக்னத்திற்கு ஏழாம் வீடான ஏழாம் ராசி மறைகிறது.  ஜாதகரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் 9 ஆம் பாதத்தில் ஏற்பட்டால், லக்னத்தின் 8 பாதங்களும் ஏற்கனவே விண்ணில் இருக்க, ஒன்பதாம் பாதம் மட்டும் விண்ணில் தோன்றிக் கொண்டிருப்பதாக அமைப்பில் இருக்கும் என்கிறது ஆருட கணிப்புகள். 

அதே நேரத்தில் ஏழாம் இடமான ஏழாம் வீட்டில், 8 பாதங்களும் மறைய தொடங்கி, ஒன்பதாம் பாதம் மட்டும் மேல் வானத்தில், குறிப்பாக மேற்கு நோக்கி உள்ள அடிவானத்தில் மறையும் தருவாயில் இடம்பெற்று இருக்கும் என்கின்றன ஆருட குறிப்புகள். 

இதனால்தான் ஒரு ஜாதகத்தில் லக்னம் அமைந்திருக்கும் வீட்டின் ராசியை விண் எழும் (உதய) ராசி என்றும், ஏழாம் வீட்டின் ராசியைப் மறையும் (அஸ்தம) ராசி என்றும் குறிப்பிடுகின்றனர். 

வாழ்க்கையை குறித்து கணிப்புகளை எடுத்துச்சொல்லும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் மட்டும், ராசி வீட்டின் தலைக்கு நேர் உயரே தோன்றும்.  அதனால்தான் இந்த ராசி வீட்டை, ஆட்சி வீடு என்றும் அனைத்து வினைகளுக்குமான இடம் என்றும், வாழ்க்கையை எடுத்துரைக்கும் இடம் என்றும் பல சிறப்புத் தன்மைகளுடன் அழைக்கப்படுகிறது. 

எனவேதான், இந்த பத்தாம் வீட்டில், ஞாயிறு, வியாழன், காரி (சனி), செவ்வாய் போன்ற அரசகோள்கள் இடம் பெற்று நின்றால், அந்த ஜாதகர் தங்குதடையின்றி தொழில் வேலை விற்பனை தரகு போன்றவற்றில் சிறப்பாக முன்னேற்றம் அடைவார் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. 

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் ராசி வீடுகள் அமைப்பு விளக்கத்தின்படி, நாம் புரிந்துகொள்ள வேண்டியது, 2 - 6 - 8 - 12 ஆகிய நான்கு இடங்களும் மறையும் இடங்களாகும்.  இந்த மழையும் இடங்களில் இடம்பெற்று நிற்கும் கோள்களின் நிலை என்பது, கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விடுகின்ற நிலைக்கு ஒப்பாகும்.  எனவேதான் இந்த நான்கு ராசி வீடுகளில் இடம்பெறும் கோள்களால் ஜாதகருக்கு எவ்வித நற்பலன்களும் இல்லை.  ஆயினும் அந்த இடங்களுக்கு உண்டான பலன்களை கடுமையாகவும் கண்டிப்பாகவும் அந்தக் கோளின் திறன் செய்து முடிக்கும் என்பது ஆரூடத்தில் கொடுக்கப்படும் உறுதி. 

இலக்கணத்தைப் பொருத்து, கோள்கள் நிற்கும் இடத்திற்கு எவ்வளவு பார்வை பலம் உள்ளது என்பதை கீழே உள்ள பட்டியலில் காணலாம். 

1.  லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் நின்ற கோள்களின் பார்வைகள் முழு பார்வை ஆகும். 

2.  ஒன்பதாம் வீட்டில் நின்ற கோள்களின் பார்வை முக்கால் பார்வை ஆகும். 

3.  ஐந்தாம் வீட்டில் நின்ற கோள்களின் பார்வை அரை பார்வை ஆகும். 

4.  பத்து மற்றும் நான்காம் வீடுகள் ஆகியவற்றில் நின்ற கோள்களின் பார்வைகள் கால் பார்வை ஆகும். 

5.  3 மற்றும் 11ஆம் வீடுகளில் நின்ற கோள்களின் பார்வைகள் அரைக்கால் (1/8) பார்வை ஆகும். 

6.  2 - 6 - 8 - 13ஆம் வீடுகளில் நின்ற கோள்களின் பார்வைகள் பயனற்ற பார்வைகள் எனலாம். 

மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின்படி பார்வை திறன் உடைய ஒரு கோள் ராசி வீட்டில் இடம் பெற்று நின்றால், அந்த ராசி வீட்டிற்கு ஏற்ப அதன் பார்வை திறனைக் கொடுக்கும் என்பதால், கோள்களில் முழுமையான பார்வையின் திறம் குறைகிறது. அத்தகைய இடங்களையே நாம் வலுவிழந்த இடங்கள் என்று சொல்கிறோம்.  எடுத்துக்காட்டாக, வியாழனுக்கு ஏழாம் பார்வை முழு பார்வை.  வியாழன் லக்கினத்தில் அல்லது ஏழாம் வீட்டில் இடம் பெற்று நின்றால் அந்த ஜாதகம் நல்ல ஜாதகம் என்று சொல்லப்படுகிறது.  ஏனெனில், வியாழன் லக்னத்தில் நின்றால், ஏழாம் இடத்திற்கு வியாழனின் முழு பார்வை ஏற்படுகிறது. அதைப்போலவே ஏழாம் வீட்டில் இடம்பெறும் வியாழனின் முழுப் பார்வையும் லக்னத்திற்கு ஏற்படுகிறது.  இவ்விதமான ஜாதக அமைப்பு கொண்ட ஒருவருக்கு வியாழன் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வைகள் அரை பார்வையாக இருப்பினும் அவை சிறந்த வலு உடையதாக கருதப்படுகின்றன. 

இத்தகைய பார்வை வலுவை உடைய வியாழன், லக்கினத்திற்கு 2 6 8 12ஆம் வீடுகளில் இடம் பெற்று நின்றால், வியாழனின் பார்வையின் நற்பயன்கள் பயனற்றதாக போய்விடுகிறது. ஆனால் இங்கே கணிப்பில் திரும்ப உள்ளது.  வலு இல்லை என்று சொன்னாலும், அந்த ராசி வீட்டில் நிற்பதற்கான பலன்களை மட்டும் வியாழனால் சரிவரச் செய்யக்கூடும் - அது எப்படி என பார்க்கலாம்! 

வியாழன் 2 என்றால் வீடு, வருவாய், கல்வி, சொல் மற்றும் உடல் மெருகு  ஆகியவற்றிற்கு மட்டும் நற்பயன் தரும்.  அங்கு நிற்பதால் ஏற்படும் ஐந்து ஏழு மற்றும் ஒன்பதாம் பார்வைகளுக்கு எந்த வலுவும் இல்லை. 

வியாழன் ஆறாம் வீட்டில் நின்றால், அதற்கு வலுயில்லை என்று சொல்லப்பட்டாலும், ஆறாம் வீட்டிற்கு உண்டான கடன், வழக்கு, துன்பம், பகை போன்ற பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்தியே தீரும் என்கிறது ஆருடம். இங்கே நாம் ஒன்றை கணிக்கும் பொழுது எடுத்துக்கொள்ளவேண்டும்.  அதாவது, ஜாதகருக்கு இந்த இடம் வியாழனின் பகை வீடாக இருப்பின், வியாழன் தமது தீய பலன்களைத் குறைவாக தரும்.  நட்பு அல்லது ஆட்சி அல்லது உயர் வீடாக இருப்பின் தீய பலன்கள் கூடுதலாக ஜாதகருக்கு கிடைக்கும்.

மேலே சொன்னவற்றை அடிப்படையாகக்கொண்டு, பிற ராசி வீடுகளில் கோள்கள் நிற்கும் வலு பற்றி கணித்துக் கொள்ளலாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading