மரப் பொருத்தம் என்றால் என்ன? மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது? திருமண பொருத்தம் பார்க்கும் போது மரப் பொருத்தம் கட்டாயம் பார்க்க வேண்டுமா?
மரப் பொருத்தம் என்பது, ஒவ்வொரு சோதிட விண்மீனிற்கும் ஒரு மரம் என கணித்து அதன் படி பொருத்தம் பார்ப்பது.
அந்த மரங்களிலும், பால் உள்ள மரம், பால் இல்லா மரம் என வரையரை படுத்தப்பட்டுள்ளது.
பால் இல்லா மரம் என்றால் ஆண் என்றோ பெண் என்றோ அவற்றை பிரிப்பதில்லை. மலடு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
பால் உள்ள மரங்களை கொண்ட விண்மீன்கள்.
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லா மரங்களை கொண்ட விண்மீன்கள்.
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு
இந்த மரப் பொருத்தம் பார்ப்பதன் மூலம் குழந்தை செல்வம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பதாகும்.
மேலும், பெண் குழந்தை பிறக்குமா என்பதையும் இதை வைத்து கணிக்கலாம்.
இந்த பொருத்தம் பார்க்க, பெண் விண்மீன் பால் உள்ளதாக அமைந்து, ஆண் விண்மீன் பாலற்றதாக அமைந்தால் குழந்தை உண்டு.
ஆண் விண்மீன் பால் உள்ளதாகவும், பெண் விண்மீன் பால் இல்லாத்தாகவும் அமைந்தால் பெண் குழந்தை இருக்காது.
ஆண் - பெண் இரண்டு விண்மீனும் பாலற்றதாக அமைந்தால் குழந்தை செல்வம் இருக்காது.
ஆண் - பெண் இரண்டு விண்மீனும் பால் உள்ளதாக இருந்தால் குழந்தை செல்வம் உண்டு.
பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பொருத்தம் பார்க்கப்படும்.
மகேந்திரம் பொருத்தமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்திற்கு உரியவர் மற்றும் வியாழன் இவர்களை ஆராயப்படும்.