ADVERTISEMENT

தமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா?

தமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா? தமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா?

கோவிலும் குளமும் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என பழ மொழிகள் சொல்ல, சாமி அறை இல்லாத வீடுகளே இல்லாத நிலை இன்று உருப்பெற்று வருகிறது.

சாமி வைத்து வணங்குவதற்கு திசைகள் உண்டா?  சாமி அறையை குறிப்பிட்ட இடத்தில் தான் வைக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் ஆங்காங்கே எழுந்துகொண்டுதான் இருக்கிறது.

முதலில், தமிழகத்தின் ஆகம விதி என்பதே சிவாலயங்கள் எப்படி கட்ட வேண்டும், சாமி எந்த சிசையில் இருக்க வேண்டும் என்பதற்கான விதி தான்.

இந்த தமிழகத்தின் ஆகம விதி தான் இன்று வட நாட்டில் இருந்து வாஸ்து சாத்திரம் என்ற பெயரில் வீடுகளுக்கு வந்துள்ளது.

ஆக, சாமி அறை அமைப்பது தான் இந்த விதிகளுக்கெல்லாம் அடிப்படை.

நாம் குடியிருக்கும் வீட்டில் சாமியறையை சரியான திசையில் வைத்துள்ளோமா? அப்படி இல்லையெனில் என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்? என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

உரிமையாக நமக்கென நிலம் வாங்கி அந்த மண்ணில் வீடு கட்டும் போது சாமி அறை என்று தனியாக திட்டமிட்டு ஒதுக்கி வீடு கட்டிவிடலாம்.

ஆனால், கட்டிய வீட்டில் அதாவது, பிளாட்களில் நாம் இந்தப் சாமியறையை கட்டாயம் எதிர்பார்க்க முடியாது.

மேலும் வாடகை வீட்டில் குடியிருக்கும் போது, சாமி அறை இப்படித்தான் வேண்டும் என்று வரயரை அமைத்து வீடு தேடினால், வீடு கிடைக்காது.

இத்தகைய நிலமையில், மரத்திலான சாமியறையை கடைகளில் வாங்கி அமைத்துக் கொள்ளலாம்.

அவ்வாறு நகர்த்திச்செல்லத்தக்க சாமியறையாக இருந்தாலும் சரி, முறையாக கட்டப்படும் சாமியறையாக இருந்தாலும் சரியான திசையில் அமைக்கப்பட வேண்டியது கட்டாயம் என்கிறது ஆகம விதி.

சாமி அறைக்கான திசைகள்:

நம்முடைய வீட்டில் சாமியறை இருக்க வேண்டிய திசையென்றால், கீழ் காணும் ஏதாவது ஒரு திசையில் இருத்தல் வேண்டும் :

1. தென்கிழக்கு பகுதி

2. வடமேற்கு பகுதி

3. தெற்கு நடுப்பகுதி

4. மேற்கு நடுப்பகுதி

மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே சாமியறை அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் வரக்கூடிய சாமியறையினால் மட்டுமே பல நன்மைகள் வந்து சேரும்.

சாமியறை வரக்கூடாத இடங்ள்:

குடியிருக்கும் வீட்டில் எங்கு சாமியறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை தவிர வேறு எங்கு வைத்தாலும் அது தவறான அமைப்பாகவே கருத வேண்டும்.

வடகிழக்கு சாமியறை மிக மிகத் தவறான அமைப்பு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே படும்.

தென்மேற்கு சாமியறை என்பதும் தவறான அமைப்பே. இங்குப் சாமியறை வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புக்குள்ளாவார்கள்.

தவறான இத்தில் சாமி அறை அமைத்தால் அதனால் ஏற்படும் தீமைகள்:

1. ஆண்கள் நல்ல வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். சில நேரம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.

2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.

3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

4. குழந்தை பிறப்பு தள்ளிப் போதல், தத்து எடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

5. வியாபாரத்தில் நொடிப்பு அல்லது வியாபாரம் தொடர முடியாமல் போவது.

6. கடன் சுமை, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.

7. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் அல்லது மனைவி தங்கிவிடுவது.

8. பில்லி சூனியம், செய்வினை போன்ற இல்லாதது பொல்லாதது மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.

9. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோயில் கோயிலாகச் சுற்றுவது.

10. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.

வீட்டில் பூஜையறை வைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த சிவனடியாரின்  அறிவுறைக்கு பிறகு வைப்பது சிறப்பு.

கோவில் கோவிலாக செல்வார்கள், சாமி சாமியாக கும்பிடுவார்கள் ஆனாலும், பல குடும்பங்களில் துன்பம் மட்டுமே ஏற்படும்.  இதற்கு அடிப்படையே சாமி அறையை சரியாக அமைப்பதை அவர்கள் அறிந்திடாததேயாகும்.




மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading