ஜாதகத்தில் கோள்கள் தங்களது நீச்ச (கோளின் திறனை குன்ற வைக்கும் இடம்) ராசியில் இருந்தால், பலன் தரும் தன்மையை இழக்கின்றன. அந்த நிலையில் அந்த கோள்கள் இருக்கும் ராசியின் உரிமையாளர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பது, பிறப்பு லக்னம் அல்லது ராசிக்கு 1, 4, 7 அல்லது 10 ஆகியவற்றில் ஏதாகிலும் ஒன்றில் அமர்ந்திருப்பது ஆகிய நிலைகளில் நீச்ச பங்க ராஜயோகம் என்ற சிறப்பு பலன் கிடைக்கிறது. நீச்ச பங்கம் அடைந்த கோள்கள் முதலில் தனது காரக நிலைகளில் அவயோக பலன்களை தந்து, பிறகு யோக பலன்களை தருகின்றன.